×

குளித்தலையில் திருச்சி- கரூர் புற வழிச்சாலையில் புதிய கட்டிடத்தில் மவுண்ட் கிரீஸ் மழலையர் தொடக்கப்பள்ளி துவக்கம்

குளித்தலை, ஜூன் 7: கரூர் மாவட்டம் குளித்தலை வைகநல்லூர் அக்ரஹாரத்தில் மவுண்ட் கிரீஸ் மழலையர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. அப்பள்ளிக்கு தற்போது திருச்சி - கரூர் புறவழிச்சாலையில அரசு மீன் பண்ணை அருகே புதுப்பொலிவுடன் கட்டிடம் கட்டப்பட்டு அதற்கான துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மணிவேலன் தலைமை வகித்தார். அவரது தாயார் ஓம் தாயம்மாள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதில் பள்ளி நிர்வாகிகள் மணி மலர், ஜெயபாரதி, பெரியசாமி மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நுழைவு பகுதியில் பள்ளி மாணவர்களை கொண்டு இயங்கும் பேண்டு வாத்தியக் குழுவினர் வாசித்து வரவேற்றனர். இறுதியாக பள்ளி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags : Mount Greece ,building ,Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்