×

நாட்றம்பள்ளி அருகே மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தம் புகை தரச்சான்றுகளை புதுப்பிப்பதில் விதிமீறல்

நாட்றம்பள்ளி, ஜூன் 7: நாட்றம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த திருமணம் நேற்று பெங்களூரில் நடக்க இருந்தது. இந்நிலையில், மைனர் பெண்ணுக்கு திருமணம் நடத்துவதாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட பணியாளர்கள் மைனர் பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அங்கு, திருமணத்திற்கு செல்ல தயாராக இருந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து, ‘மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். அதைமீறி திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தனர். இதைதொடர்ந்து, பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஒப்புதலின்படி திருமணத்தை நிறுத்தினர்.

Tags : Minor ,Natrampalli Disruption ,
× RELATED புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக...