×

2வது திருமணம் செய்வதற்கு பெண் கேட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

சென்னை, ஜூன் 7: இரண்டாவது திருமணம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் தொழிலதிபரை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராமாபுரம் அன்னை சத்யாநகரை சேர்ந்தவர் ரமேஷ் (30). தொழிலதிபர். ஆயிரம்விளக்கு பகுதியில் கம்பெனி நடத்தி வருகிறார். ரமேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளன. தற்போது கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷ் தனது மனைவியை பிரிந்துள்ளார். இதையடுத்து தன் கம்பெனியில் 5 ஆண்டாக வேலை செய்யும் பெண் தவுலத் என்பவரின் மகளை 2வது திருமணம் செய்ய ரமேஷ் முடிவு செய்தார். அதற்கு தவுலத்தும் முழு சம்மதம் அளித்துள்ளார். அதன்படி திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தவுலத் உறவினர்கள் மகளை இரண்டாம் திருமணம் செய்து கொடுக்க கூடாது என்று தகராறு செய்துள்ளனர். இதனால் தவுலத் தனது மகளை தொழிலதிபர் ரமேஷுக்கு திருமணம் முடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு ரமேஷ் திருவல்லிக்கேணியில் உள்ள தவுலத் வீட்டிற்கு வந்து, ‘‘உனது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும்’’ என்று தகராறு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து தவுலத் உறவினர் திருவல்லிக்கேணி வெங்கடசாமி சாலையை ேசர்ந்த இனயதுல்லா (36), தனது நண்பர்களான ரபிக் (38), சையத் ரபிக் (32), மெகபூப் பாஷா (32) ஆகியோர் தவுலத் வீட்டிற்கு வந்து தொழிலதிபர் ரமேஷிடம் கடுமையான தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த இனயதுல்லா மறைத்து வைத்திருந்த கத்தியால் தொழிலதிபரை கழுத்து உள்பட பல இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இதில் படுகாயமடைந்த ரமேஷ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ரமேஷ் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய இனயதுல்லா உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் திருவல்லிக்கேணியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : dispute ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...