×

செய்யூர் தாலுகா கருப்பூரில் கைலாயநாதர் கோயில் கும்பாபிஷேகம்

செய்யூர், ஜூன் 7: செய்யூர் அருகே கருப்பூர் கைலாயநாதர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். செய்யூர் தாலுகா பவுஞ்சூர் அடுத்த கருப்பூர் கிராமத்தில் தையல்நாயகி உடனுறை கைலாயநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மறுபுனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த 3ம் தேதி  கோயிலில் உள்ள கல்லணை விநாயகர், முத்துமாரியம்மன், சந்தி  அம்மனுக்கு அபிஷேகங்களுடன் ஆரம்பமான இவ்விழா, தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள், தீபாராதனைகள், கோ பூஜை, புதிய பிம்பம் கண் திறத்தல், யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு, அஷ்டபந்தனம் சமர்பித்தல் உள்ளிட்டவைகள் நடந்தன.
தொடர்ந்து, நேற்று பூர்ணாஹுதி தீபாராதனைகள் நடத்தப்பட்டு, புனிதநீர் கலசங்களுடன் ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தில் கலசங்களில், சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி ஸ்ரீகைலாயநாதர் மற்றும் ஸ்ரீதையல் நாயகிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம்.

Tags : Kumbhabhishekam Temple ,
× RELATED சித்தூரம்மன் கோயில் கும்பாபிஷேகம்