×

கருமத்தம்பட்டியில் பயணிகளை ஏற்ற மறுத்த தனியார் பேருந்து சிறைபிடிப்பு

சோமனூர், ஜூன் 5: பயணிகளை ஏற்ற மறுத்த தனியார் பேருந்தை கருமத்தம்பட்டியில் பொதுமக்கள் சிறை பிடித்தனர். கோவையிலிருந்து திருப்பூர் செல்லும் தனியார் பேருந்தில் கருமத்தம்பட்டி பயணிகள் சிலர் நேற்று கோவை காந்திபுரத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர். அப்போது நடத்துனரும், ஓட்டுனரும்  கருமத்தம்பட்டியில் பஸ் நிற்காது என்று கூறியதுடன், வலுக்கட்டாயமாக இறங்க வேண்டும் என்று தகாத வார்த்தையால் பேசி கீழே இறங்கிவிட்டுள்ளனர். பஸ்சில் இருந்து கீழே
இறக்கப்பட்டவர்கள் சோமனூர் பகுதியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பெயரில் கருமத்தம்பட்டி நால் ரோட்டில் நேற்று இரவு 9 மணிக்கு பயணிகளுடன் வந்த அந்த தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். கருமத்தம்பட்டியில் ஏன் பஸ் நிற்காது என வாக்குவாதம் செய்த பொதுமக்கள் பஸ் ஓட்டுனரையும், நடத்துனரையும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் எச்சரித்து அனுப்பினர். இதனால் இந்த பேருந்தில் வந்த பயணிகள் பலர் மாற்று பேருந்தில் ஏறி சென்றனர்.

Tags : passengers ,Karumathampatti ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...