×

திண்டிவனம் அருகே மின்ஊழியர் வீட்டில் பணம், நகை கொள்ளை

திண்டிவனம், ஜூன் 5: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள முருக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (42). மின்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவருடைய வீட்டின் பின்புறம் உள்ள கதவினை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 சவரன் நகைகளை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து பிரம்மதேசம் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Tags : home ,jewelry robbery ,Tindivanam ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...