×

நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோயில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

நெல்லிக்குப்பம், ஜூன் 5: நெல்லிக்குப்பம் காந்தி வீதியில் புகழ் வாய்ந்த ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம்
நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள தாயாரம்மாள், சுதர்சன ஆழ்வார், வைஷ்ணவி, ஆண்டாள், ஆஞ்சனேயர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. பின்னர் வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலையில் வேணுகோபால சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தம்பதியர்களாக ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ரமேஷ் பட்டாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்தார். வேணுகோபால பக்தஜனசபா சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Nellikuppam Venugopala Swamy Temple ,
× RELATED நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவம்