×

பவானி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது

சத்தியமங்கலம், ஜூன் 5: பவானி ஆற்றில் மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலம்  அடுத்துள்ள சதுமுகை கிராமத்தில் உள்ள பவானி ஆற்றில் இருந்து இரவு  நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. நேற்றுமுன்தினம் இரவு போலீசார்  சத்தியமங்கலம்-சதுமுகை சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது, அந்த வழியாக  மொபட்டில் 2 மூட்டை மணலுடன் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர்.  விசாரணையில்,  சதுமுகையை சேர்ந்த மோகன்ராஜ் (42), ஆனந்தகுமார் (42) என தெரியவந்தது.  மேலும், பவானி ஆற்றில் இருந்து மணல் எடுத்து விற்பனைக்கு கொண்டு சென்றது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : Bhavani ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும்...