×

வீதிகளில் நடமாட பெண்கள் அச்சம் ஐடிஐகளில் சேர ஜூன் 15 வரை அவகாசம்

விருதுநகர், ஜூன் 5: விருதுநகர் மாவட்ட அரசு, தனியார் ஐடிஐகளில் 2019ம் ஆண்டிற்கான ஒராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க மே 3 முதல் ஆன்லைனில் இருபாலரும் விண்ணப்பித்து வந்தனர். மே 31ம் தேதி
கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அரசு, தனியார் ஐடிஐகளில் பயிற்சிக்கு சேருவதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 15ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஐடிஐகளில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் விருதுநகர் 04562-252383/252655, சாத்தூர் 4562&263386, அருப்புக்கோட்டை 04566-225800 எண்ணிகளில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : women ,streets ,ITIs ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...