×

திருவில்லிபுத்தூர் அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி 200 பேர் கலந்து கொண்டனர்

5திருவில்லிபுத்தூர், ஜூன் 5: திருவில்லிபுத்தூர் அருகே, 200 பயிற்சிக் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, மொட்டைமலையில் உள்ள 11வது பட்டாலியனில், 2018 டிசம்பரில் தேர்வான காவலர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, எஸ்பி ராஜராஜன் உத்தரவின்பேரில், மதுவிலக்கு காவல் துணைகண்காணிப்பாளர் ஸ்டீபன் தலைமையில், திருவில்லிபுத்தூர் - கிருஷ்ணன்கோவில் தேசியநெடுஞ்சாலை அருகே, துப்பாக்கி சுடும் மைதானத்தில், பயிற்சிக் காவலர்களுக்கு நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 200க்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு வகையான துப்பாக்கிகளை எப்படி கையாளுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இலக்கை சரியாக குறி பார்த்து சுட்ட காவலர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

Tags : Srivilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...