×

கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை

ராமநாதபுரம், ஜூன். 5: ராமநாதபுரம் அருகே இளமனூர் புரண்டி கண்மாயில் மண் அள்ளியதை தடுத்த முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் மோகன் கொல்லப்பட்டார். 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக கேணிக்கரை போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆனந்தராஜ் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தார். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். இதுபற்றி எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா கூறுகையில், மோகன் கொலையில் தொடர்புள்ளவர்களை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு படையினர் சென்னையில் சரணடைந்த ஆனந்தராஜிடம் விசாரணை நடத்த சென்றுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : personalities ,killers ,
× RELATED ராஜஸ்தானில் கர்னி சேனா தலைவர் கொலை வழக்கில் 3 கொலையாளிகள் கைது