×

திருமங்கலம் அருகே போலீஸ் ஸ்டேசனில் பைக்குகள் எரிந்து நாசம்

திருமங்கலம், ஜூன் 5: திருமங்கலம் அடுத்த சிந்துபட்டி போலீஸ் ஸ்டேசனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைக்குள் இரவில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் உட்கோட்டத்தில் அமைந்துள்ளது சிந்துபட்டி போலீஸ் ஸ்டேசன். திருமங்கலம் உசிலம்பட்டி மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஸ்டேசனில் விபத்து மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட டூவீலர்கள் ஸ்டேசன் காம்பவுண்ட் சுவரையொட்டி உள்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்து டூவீலர்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தன. அப்போது ஸ்டேசனில் பாரா பணியில் இருந்த போலீஸ்காரர் சிவக்குமார் வெளியே வந்து பார்த்து பொதுமக்கள் உதவியுடன் டூவிலர்களில் பிடித்த தீணை அணைத்தார். இருப்பினும் இந்த சம்பவத்தில் மூன்று டூவிலர்கள் எரிந்து எலும்புகூடாக மாறின. ஸ்டேசனில் நிறுத்தி வைக்கப்பட்ட டூவிலர்கள் எப்படி திடீரென தீப்பிடித்தது என தெரியவில்லை. இதுகுறித்து போலீஸ்காரர் சிவக்குமார் கொடுத்த புகாரில் எஸ்ஐ ராமநாதன் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் யாராவது டூவீலர்களுக்கு தீ வைத்து சென்றனரா என விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : police station ,Tirumangalam ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...