×

ரம்ஜான் பெருநாளையொட்டி காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை

ஆறுமுகநேரி, ஜூன் 5: ரம்ஜான் பெருநாளையொட்டி காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் பெருநாளையொட்டி சிறப்புத் தொழுகை நடந்தது. ஹிஜ்ரி கமிட்டி மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் நேற்று காலை 7 மணிக்கு அல்ஜாமிஉல் அஸ்கர் பெரிய பள்ளி இமாம் நைனா முகமது ரம்ஜான் பண்டிகைக்கான சிறப்புத் தொழுகையை நடத்தினார். பள்ளி அஸ்ரத் அப்துல் மஜித் மஹ்லரி குத்பா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். சிறப்புத் தொழுகையில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் அபுல்ஹசன் கலாமி, த.மு.மு.க. நகர துணைத்தலைவர் முர்ஷித் முஹ்சின் மற்றும் பெண்கள் என 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

Tags : beach ,Ramgana ,Kayalpattinam ,
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...