×

தெற்கு மாவட்ட திமுக சார்பில் காயல்பட்டினத்தில் இப்தார் விருந்து

ஆறுமுகநேரி, ஜூன் 5: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் காயல்பட்டினத்தில் இப்தார் விருந்து நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நேற்று மாலை நடந்த இந்நிகழ்ச்சிக்கு உஷேர் ஹாஜியார் தலைமை வகித்தார். இதில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பாளை தொகுதி எம்எல்ஏ மைதீன்கான், ஓட்டப்பிடாரம்  தொகுதி எம்எல்ஏ சண்முகையா பங்கேற்று ரமலான் நல்வாழ்த்து தெரிவித்துப் பேசினர். இதில் மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்  உமரிசங்கர், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்காதர், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, காயல்பட்டினம் நகரச் செயலாளர் முத்து முகமது,  இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராமஜெயம், அனஸ், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், ஒன்றியச் செயலாளர்கள் பி.ஜி. ரவி, பாலசிங், ஆறுமுகநேரி நகரச் செயலாளர் கல்யாணசுந்தரம், மகளிர் தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் லதா, தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு, முன்னாள் கவுன்சிலர் ஓடை சுகு, முன்னாள் நகரச் செயலாளர் ஜெய்னுதீன், இந்திய முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், மதிமுக காயல் அமானுல்லா, காங்கிரஸ்  ஷாஜகான், வக்கீல் ஜெபராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் ராஜேஷ் தலைமையில்  தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : party ,Kayalpattinam ,DMK ,Southern District ,
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...