×

செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக்கில் வளாக தேர்வு

செய்துங்கநல்லூர், ஜூன் 5: செய்துங்கநல்லூர் செயிண்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு நடந்தது. மூன்றாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் மாணவர்களுக்காக நடந்த இந்த வளாக தேர்வில் டெக்சன் எனர்ஜிஸ் கம்பெனியை சேர்ந்த அதிகாரிகள் மணி தாஸ்,பொன் மலைக்குமார் ஆகியோர் நேர்முக தேர்வு நடத்தினர். இதில் 18 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் ஜான்செண்பகதுரை உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு