×

திருவாரூர் இளைஞர், மாணவர் பெருமன்ற கூட்டத்தில் முடிவு தெரு மின் விளக்குகள் சரிவர எரியாததால் திருவாரூர் நகரம் முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்

திருவாரூர், ஜூன் 4: திருவாரூர் நகரில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் நகர் முழுவதும் பொது மக்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகரில் கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 55 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அதன் பின்னர் தற்போது 8 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட தலைநகரம் என்பதால் இங்கு கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் உட்பட அரசு துறைகளின் அனைத்து அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இது மட்டுமன்றி மத்திய அரசின் பல்கலை கழகமும் இயங்கி வருவதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.
இதன் காரணமாக திருவாரூர் நகருக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நகரின் முக்கிய வீதிகள் என கூறப்படும் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கமலாலயத்தின் 4 கரைகள் மற்றும் பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம், தஞ்சை சாலை உட்பட அனைத்து பகுதிகளிலும் மின்விளக்குகள் சரிவர எரியாதததால் அனைத்து வீதிகளும் இருளில் மூழ்குவதன் காரணமாக இரவு நேரங்களில் வீதிகளில் பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் தற்போது அதிகாலையில் பெரும்பாலானவர்கள் நடைபயிற்சியில் ஈடுபடும் நிலையில் இருட்டு சூழல் காரணமாக பெண்களிடம் நகை பறிப்பு சம்பவமும் நடைபெற்று வருவதால் பெண்கள் மத்தியிலும் பெரும் அச்சம் இருந்து வருகிறது. இது மட்டுமின்றி தற்போது நகரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி செல்லும் அனைத்து பேருந்துகளும் ரயில்வே மேம்பாலத்தில் நின்று செல்வதால் அங்கே பயணிகளின் கூட்டம் இரவு பகலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ரயில்வே மேம்பாலம் அருகிலும் தெரு விளக்குகள் சரியாக எரியாததன் காரணமாக அங்கு பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்களும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே நகர் முழுவதும் தெருவிளக்குகளை உரிய முறையில் எரிய விடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruvarur ,student malling ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...