×

முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை வேண்டும் நாகை எம்பி செல்வராஜிடம் கோரிக்கை மனு

முத்துப்பேட்டை, ஜூன் 4: முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நாகை எம்பி செல்வராஜிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு கொடுத்னர். முத்துப்பேட்டைக்கு வந்த நாகை எம்பி செல்வராஜை வர்த்தகக் கழக தலைவர் மெட்ரோ மாலிக் தலைமையில் வியாபாரிகள், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சதீஸ்குமார், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ரெங்கசாமி, செயலாளர் விஜயகுமார், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் சந்தித்தனர். அப்போது அவர்கள் முத்துப்பேட்டை ரயில் நிலையம் பழைய நிலையில் செயல்படவும், தற்பொழுது “பி” கிரேடாக இருந்ததை “டி” கிரேடாக மாற்றியதை ரத்து செய்யவும், மேலும் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் பல்வேறு வசதிகளை ஏறபடுத்தி தரவும், சிறப்புகள் வாய்ந்த இப்பகுதியில் தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் வகையில் கூடுதல் ரயில்கள் விடவும் சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட எம்பி செல்வராஜ் கண்டிப்பாக முயற்சி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று அவர்களிடம் உறுதியளித்தார்.

Tags : railway station ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...