×

திருமக்கோட்டை பாலையக்கோட்டையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்த சுகாதார வளாகத்தால் பொதுமக்கள் அவதி

மன்னார்குடி, ஜூன் 4: திருமக்கோட்டை அருகே போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு திறந்து விட கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே பாலையக்கோட்டை ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் பல லட்சம் ருபாய் மதிப்பில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த பொது சுகாதார வளாகம் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்து நீண்ட நாட்களாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
இந்த சுகாதார வளாகத்தின் உள்ளேயும் வெளிப்புறத்திலும், அதனை சுற்றிலும் செடி கொடிகள் மண்டி புதர் போல் காட்சியளிக்கிறது. மேலும் எந்த நோக்கத்திற்காக பொது சுகாதார நிலையம் இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டதோ அதற்கு நேர்மாறாக தண்ணீர் வசதி இல்லாமல் பயனற்று கிடக்கிறது. இதனால் கழிவறை வசதியின்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் இப்பகுதிக்கு நேரில் வந்து சேதமடைந்து கிடக்கும் பொது சுகாதார வளாகத்தை பார்வையிட்டு அதனை உடன் சீரமைத்து தண்ணீர் வசதியும் செய்து தர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : slums ,Tirumkottai ,Thirumkottai ,
× RELATED சித்திரை திருவிழா நெருங்குகிறது...