×

முத்துப்பேட்டை அருகே நண்பர்கள் இடையே தகராறு பீர் பாட்டிலால் தாக்கி வாலிபர் மண்டை உடைப்பு

முத்துப்பேட்டை, ஜூன் 4: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் கோவிலடி பகுதியை சேர்ந்தவர்கள் தங்கராசு மகன் மோகன்(33), சிவசுப்பிரமணியன் மகன் மாரிமுத்து(28), ரவி மகன் ஆனந்த்(26), சரவணன் மகன் பவனிதரன்(28). இவர்கள் 4 பேரும் ஒன்றாக மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது போதை அதிகமானதால் மோகனுக்கும் மற்ற மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாரிமுத்து, ஆனந்த், பவனிதரன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மோகனை சரமாரியாக தாக்கினர். மேலும் பீர் பாட்டிலால் தாக்கியதில் மோகனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் மோகனை தாக்கிய மாரிமுத்துவை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் ஆனந்த், பவனிதரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : dispute ,friends ,Muthupettu ,
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...