×

பாபநாசம் கிளை சிறையில் விசாரணை கைதிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

பாபநாசம், ஜூன் 4: பாபநாசம் கிளை சிறையில் விசாரணை கைதிகளுக்கான சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. பாபநாசம் கோர்ட் நீதிபதி சிவகுமார் பேசுகையில், சிறை கைதிகளுக்கு வக்கீல்கள் வைக்க வசதியில்லையென்றால் வட்ட சட்ட பணிகள் குழு மூலம் வக்கீல் வைத்து பிணையில் எடுக்கவும், நீதிமன்றத்தில் வழக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும். விசாரணை கைதிகள் திருந்தி ஒழுக்கமிக்க வாழ்க்கையை வாழ வேண்டும் என்றார்.
கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர் சந்தனம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : prisoners ,law awareness camp ,branch jail ,Papanasam ,
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்