×

மைனர் பெண் கடத்தல்

கறம்பக்குடி, ஜூன் 4: கறம்பக்குடி அருகே பிலாவிடுதி ஊராட்சி கூத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வராசு, துரைராஜ். உறவினர்களான இருவரும் விவசாயிகள். இதில் செல்வராசு மகள் பெயர் ஜோதி(17). பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர் கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் ஜோதியின் சகோதரர் திருமேனிநாதன் கறம்பக்குடி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரில் தனது சகோதரியை அதே கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகன் வில்லப்பன் கடத்தி சென்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Minor ,
× RELATED புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக...