×

கொலை மிரட்டல் விடுவோர் மீது நடவடிக்கை கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

பெரம்பலூர், ஜூன் 4: தொண்டமாந்துறை கிராமத்தில் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர், தன்னையும் தன் குடு ம்பத்தையும் காப்பாற்ற வேண்டும், கொ லை மிரட்டல் விடுவோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துரை கிராம த்தைச் சேர்ந்த ராசு என்பவரது மகன் ராமச்சந்திரன் (38). இவர் நேற்று தனது மனைவி செல்லப்பாண்டி என்பவருடன் பெரம்பலூர் எஸ்பி அலுவலக த்திற்கு வந்து கண்ணீருடன் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது : நான் தொண்டமாந்துறை கிராமத்தில் எனது மனைவி செல்லப்பாண்டி, பிள் ளைகள் சுவேதா, நிவேதா ஆகியோருடன் வசித்து வருகிறேன். எனது குடும்ப செலவிற்காக இதே கிராமத்தைச் சேர்ந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும், சந்திரா என்பவரிடம் கடந்த 2014, மே மாதம் 16ம்தேதி ரூ1.50 லட்சத்தை வட்டிக்கு கடனாக வாங்கி இரு ந்தேன். வாங்கிய தொகைக்கு மாதா மாதம் வட்டியைக் கொடுத்து வந்து, அசல் தொகையில் ரூபாய் ஒரு லட்சத்தை 2018 மார்ச் 15ம் தேதியே கொடுத்துவிட்டேன். நான் சந்திராவுக்கு பாக்கித் தொகை யாகத் தரவேண்டியது இன்னும் ரூ50 ஆயிரம் மட்டுமே உள்ளது. இதில் என்னி டம் சந்திரா, எனது வீட்டை விலைக்கு கேட்டு, அவருக்கு நான் கொடுக்காததை மனதில் வைத்துக் கொண்டு, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பல வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறார். மேலும் நான் வாங்கிய தொகைக்கு கந்து வட்டி கணக்கிட்டு, கூடுதல் தொகை கேட்டு அடியாட்களை வைத்து மிரட்டிவருகிறார்.

என்னையும் என் குடும்பத்தாரையும் தெரியாமல் படம் பிடித்து வைத்துக்கொ ண்டு நான்கேட்கும் பணத்தை தராவி ட்டால் அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டி வருகி றார். நான் சந்திராவுக்கு தரவேண்டியது ரூ 50ஆயிரம் மட்டுமே பாக்கி உள்ளது. ஆனால் சந்திராவோ கந்துவட்டி ஆக கணக்கிட்டு ரூ4.50 லட்சம் தரவேண்டும் என்று மிரட்டி வருகிறார். மேலும் இந்த பிரச்னையில் தொண்ட மாந்துறை கிராமத்தைச் சேர்ந்த கிரு ஷ்ணராஜ் என்பவரும் என்னிடம் சந்தி ராவுக்கு தரவேண்டிய பணத்தை கேட்டு வருகிறார். குரும்பலூர் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவ ரும் சந்திராவுக்கு தரவேண்டிய பண த்தை என்னிடம்கொடு எனக்கேட்டு மிரட்டி வருகிறார். மேலும் எனதுமனைவி மற்றும் பெண் பிள்ளைகளை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் கேட்டு வருகின்றனர். எனவே தொண்டமாந்துறை சந்திரா மீதும் மேட்டாங்காடு ஆனந்தன் மீதும் நடவடிக்கை எடுத்து, என்னையும் என் குடும்பத்தை யும் கந்து வட்டி கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என ராமச்சந்திரன் கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவி த்துள்ளார்.

Tags : victim sufferer ,victims ,murder ,SP ,
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...