×

இருதரப்பினர் மோதலில் 2 பேர் காயம் 14 பேர் மீது வழக்குப்பதிவு

பாடாலூர், ஜூன் 4: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள கூத்தனூரை சேர்ந்தவர் பாக்கியராஜ் (38). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (56) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுப்பிரமணி தரப்பினரும், பாக்கியராஜ் தரப்பினரும் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் படுகாயமடைந்த பாக்கியராஜ், சுப்பிரமணி ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாக்கியராஜ் கொடுத்த புகாரின்பேரில் துரை, சுப்பிரமணி, தினேஷ், மதி, அஜித், வேலு ஆகிய 6 பேர் மீதும், சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் பாக்கியராஜ், பிரபு, புகழேந்தி ஆகிய 3 பேர் மீதும் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாக்கியராஜிக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் சுப்பிரமணியன் தரப்பை சேர்ந்த தினேஷின் கடையை சேதப்படுத்தியதாக கடையின் மாஸ்டர் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் புகழேந்தி, செந்தில், வைத்திலிங்கம், பிரபு, முருகேசன் ஆகிய 5 பேர் மீதும் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகி–்ன்றனர். திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் புறம்போக்கு இடத்தில் இருப்பதாக கூறி அதிகாரிகள் எங்களை காலி செய்ய சொல்கின்றனர்.

Tags : persons ,clash ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...