×

மாலையிட்டு, மேளதாளத்துடன் அழைத்து வந்தனர்

திருச்சி, ஜூன் 4: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண்.1, 2, 3 மற்றும் ஆளவந்தார் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களில் ரங்கம் துணைமின்நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (4ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்விநியோகம் இருக்காது.

இதனால் ரங்கம் பகுதி முழுவதும், ரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான விறகுபேட்டை, மஹாலட்சுமி நகர், நேருஜிநகர், அரிமங்கலம், உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில்நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தர் நகர், ஜே.கே.நகர், மேலகல்கல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம்,

கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்தியசிறைச்சாலை, சுப்பிரமணியபுரம், விமானநிலையபகுதி, காமராஜ்நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்தநகர், சத்யவாணிமுத்து நகர், அய்யப்பநகர் மற்றும் கோ-அபிஷேகபுர கோட்டத்திற்கு உட்பட்ட உறையூர், மங்களநகர், பாத்திமாநகர், சிவாநகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம் நகர், பாரதி நகர், புத்தூர் பகுதி, எடமலைப்பட்டிபுதூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொன்டைமான் நகர்,

கிராப்பட்டி் போன்ற பகுதிகளில் இன்று ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை (5ம் தேதி) வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டுமென திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : gym ,
× RELATED ஆவடி 40வது வார்டில் துருப்பிடித்து...