×

நோன்புபெருநாள் குறித்து அறிவிக்க திருச்சியில் இன்று ஹிலால் கமிட்டி கூட்டம்

திருச்சி, ஜூன் 4: நோன்புபெருநாள் குறித்து அறிவிக்க திருச்சியில் இன்று ஹிலால் கமிட்டி கூட்டம் நடக்கிறது. திருச்சி பெரியகடைவீதி பேகம் சாஹேபா பள்ளிவாசல் வளாகத்தில் இன்று மாலை ஹிலால் கமிட்டி கூட்டம் நடக்கிறது. இதில் ரமலான் பிறை 29 மாலை மஃகரிப் தொழுகையுடன் ஷவ்வால் முதல் பிறை (நோன்பு பெருநாள்) அறிவிப்பு (ஷவ்வால் மாத ஆரம்பம்) தொடர்பாக ஹிலால்கமிட்டி கூட்டத்தில் பிறை செய்தியை அறிந்து நோன்பு பெருநாள் தொடர்பாக அறிவிப்பு செய்வார்கள் என திருச்சி மாவட்ட அரசு காஜி மற்றும் ஹிலால்கமிட்டி தலைவர் ஜலீல்சுல்தான் ஆலீம் மன்பயீ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Hillary Committee ,meeting ,Trichy ,
× RELATED திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல...