×

திருச்சி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி

திருச்சி, ஜூன் 4: திருச்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி வருகிற 11ம்தேதி துவங்குகிறது. 20.6.2019 வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில், 1428ம் பசலி ஆண்டிற்கான (2018-19) வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும், 11.6.2019 முதல் தொடங்கி 20.6.2019 வரை நடைபெற உள்ளது.

அதன்படி திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் தொட்டியம் தாசில்தார் அலுவலத்திலும், டிஆர்ஓ சாந்தி தலைமையில் மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்திலும், ரங்கம் சார் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் ரங்கம் தாசில்தார் அலுவலகத்திலும், திருச்சி ஆர்டிஓ அன்பழகன் தலைமையில் திருச்சி (மேற்கு) தாசில்தார் அலுவலகத்திலும், லால்குடி ஆர்டிஓ பாலாஜி தலைமையில் லால்குடி தாசில்தார் அலுவலகத்திலும், முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமையில் துறையூர் தாசில்தார் அலுவலகத்திலும்,

சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியர் பழனிதேவி தலைமையில் மணப்பாறை தாசில்தார் அலுவலத்திலும், திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கிறிஸ்டி தலைமையில் திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகத்திலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் காமராஜ் தலைமையில் மருங்காபுரி தாசில்தார் அலுவலகத்திலும், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன தனித் துணை ஆட்சியர் செல்வம் தலைமையில் முசிறி தாசில்தார் அலுவலகத்திலும்,

முத்திரைக் கட்டண தனித் துணை ஆட்சியர் ரமேஷ் தலைமையில் திருச்சி (கிழக்கு) தாசில்தார் அலுவலகத்திலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து தங்கள் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : offices ,district ,Taluka ,Trichy ,
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு