×

சிறைத்துறை புதிய காவலர்களின் அணிவகுப்பு இன்று மாலை நடக்கிறது

திருச்சி, ஜூன் 4: தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் மூலம் கடந்தாண்டு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் புதிதாக காவலர்கள் தேர்வு நடத்தி ஆயிரத்திற்கும்மேற்பட்டோரை தேர்வு செய்தனர். இதில் திருச்சியில் நடந்த தேர்வில் சிறைத்துறைக்கு தேர்வான காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள பயிற்சி பள்ளில் நடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த பயிற்சியில் 315 காவலர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு முடிவடைந்த நிலையில் புதிய காவலர்களின் அணிவகுப்பு இன்று மாலை 5 மணிக்கு மத்திய சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. இதற்காக கடந்த சில நாட்களாக மைதானம் தயார்ப்படுத்தும் பணி நடந்து வந்தது. இன்று நடைபெறும் அணிவகுப்பில் மாநகர கமிஷனர் அமல்ராஜ் தலைமை வகிக்கிறார். ஏற்பாடுகளை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் செய்து வருகிறார்.

Tags : jailing ,
× RELATED சிறைத்துறை புதிய காவலர்களின் அணிவகுப்பு இன்று மாலை நடக்கிறது