×

தகராறில் மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு

திருச்சி, ஜூன் 4: திருச்சி வயலூர் மெயின்ரோடு குமரன்நகர் சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர் இலங்கை தமிழர் விஜயரூபன் (36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஷாலினி. விஜயரூபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 31ம் தேதி குடித்து விட்டு வந்ததால் கணவன், மனைவிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஷாலினி கோபித்துக்கொண்டு தாய் வீடான கொட்டப்பட்டு அகதிகள் முகாமிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த விஜயரூபன் அன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்றுமுன்தினம் மாலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரை அடுத்து உறையூர் போலீசார் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு உடல் அழுகிய நிலையில் விஜயரூபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் விஜயரூபன் கடைசியாக அவரின் செல்போனில் இருந்து லண்டனில் உள்ள அக்காவிற்கு மகனை பார்த்து கொள் என எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து ெகாண்டது தெரியவந்தது.

Tags : auto driver ,home ,dispute ,suicide ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு