×

சிறுத்தை நடமாட்டத்தால் அங்கன்வாடி மையம் மூடல்

வால்பாறை, ஜூன் 4: வால்பாறையை அடுத்துள்ள குரங்குமுடி எஸ்டேட் பாரதிதாசன் நகரில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் அருகே சிறுத்தை நடமாடியதால் இந்த மையம் மூடப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள குரங்குமுடி அங்கன்வாடி மையத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களாக இப்பகுதியில் சிறுத்தை நடமாடி வருவதாக தகவல் வெளியானது.இதனைதொடர்ந்து நேற்று பணிக்கு வந்த அங்கன்வாடி ஊழியர்கள்,குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று முட்டையை மட்டும் வழங்கிவிட்டு அங்கன்வாடி மையத்தை பூட்டிவிட்டு சென்றனர்.

இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு  இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பிறகே  மையம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனில் என்பவரது வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது, இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Tags : closure ,Anganwadi Center ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்