×

விபத்தில் மெக்கானிக் சாவு

கோவை, ஜூன் 4: கோவை ராமநாதபுரம் அருகேயுள்ள அருணாச்சலம் வீதியை சேர்ந்த சாலமன் மகன் ஆகாஷ் (21). பெருமாள் கோயில் வீதியை சேர்ந்த மணிவண்ணன் மகன் விஷ்ணு (21), விருது நகர் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் மருது (23). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.  இவர்கள் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு கார் ஷோரூமில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தனர். நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு இவர்கள்  3 பேரும் வ.உ.சி பூங்கா வளாகத்தில் பேசி கொண்டிருந்தனர். பின்னர் 3 பேரும் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். எல்.ஐ.சி சந்திப்பு சிக்னல் அருகே சென்ற போது சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பஸ் மீது 3 பேர் ெசன்ற பைக் மோதியது. இதில் ஆகாஷ், மருது ஆகியோர் சென்டர் மீடியன் மீது விழுந்து காயமடைந்தனர். பைக்கை ஓட்டிய விஷ்ணு பஸ்சில் பைக்குடன் சிக்கினார். சில அடி தூரம் பைக்கை பஸ் இழுத்து சென்றது. இந்த விபத்தில் ஆகாஷ் இறந்தார். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போக்குவரத்து  போலீசார்   விசாரிக்கின்றனர்.


Tags : Accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...