×

மகன்களுக்கு பெண் கிடைக்காததால்

திருச்சி, ஜூன் 4: திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி உஷாராணி (41). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகவில்லை. பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட உஷாராணி நேற்று முன் தினம் தீக்குளித்தார். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இறந்தார்.
இதுகுறித்து மகன் சேகர் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : sons ,
× RELATED போரும் பெண்களும்!