×

சிறப்பு எஸ்ஐ திடீர் மரணம்

சேலம், ஜூன் 4: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை சேர்ந்தவர் சிறப்பு எஸ்.ஐ., மாரிமுத்து (49). இவர் அஸ்தம்பட்டி சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மாரிமுத்து விடுப்பு எடுத்து தாயை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு, மாரிமுத்துவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மீட்டு அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார். உயிரிழந்த மாரிமுத்துவுக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், எழில்அருள், ராகுல் என்ற மகன்களும் உள்ளனர். அவருடைய உடல் சொந்த ஊரான தீவட்டிப்பட்டி கொண்டு செல்லப்பட்டது. நேற்று மாலை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : death ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு