×

வீரகனூரில் டாஸ்மாக் கடை திறக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு

கெங்கவல்லி, ஜூன் 4: வீரகனூரில் டாஸ்மாக் கடை திறக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கெங்கவல்லி தாலுகா, வீரகனூர் அருகே தென்கரை பூலாம்பாடி ரோடு பெரியாண்டவர் கோயில் அருகே விவசாய நிலத்தில், டாஸ்மாக் கடை கொண்டுவர அதிகாரிகள் முயன்றனர். இதற்கு கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அந்தப் பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு நேற்று காலை 11 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அப்போது, தென்கரை பகுதியில் டாஸ்மாக்கடை அமைத்தால் அதை எதிர்த்து போராடுவது, அல்லது நீதிமன்றம் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், இது விவசாயப் பகுதி என்பதால் இங்கு டாஸ்மாக்கடை வந்தால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tashkm Shop ,Veeraganur ,
× RELATED வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது