திருச்செங்கோடு, ஜூன் 4: நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், பரமத்திவேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி முன்னிலையில் மணப்பள்ளி, வேலூர் பகுதி பாமக மற்றும் அதிமுக கட்சியினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று திமுகவில் இணைந்தனர். வேலூர் பேரூர் செயலாளா் மணிமாரப்பன், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் பிரதாப்சக்கரவர்த்தி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் அருண், சுரேஷ் மற்றும் பலா் உடன் இருந்தனர்.