×

ஆத்தூரில் ₹1 கோடிக்கு மஞ்சள் ஏலம்

ஆத்தூர், ஜூன் 4: ஆத்தூரில் மஞ்சள் மற்றும் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஆத்தூர் புதுப்பேட்டையில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மஞ்சள் எடைபோடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று, சங்கத்தில் ஏலத்தில் எடுக்கப்பட்ட மஞ்சள்கள் எடை போடும் பணி துவங்கியது. இதில் விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட 2500 முட்டை மஞ்சள் ₹ 1 கோடிக்கு ஏலம் போனது. விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ₹6299 முதல் ₹7019 வரையிலும், உருண்டை ரகம் ₹5399 முதல் ₹7512 வரையிலும், பனங்காளி ₹5699 முதல் ₹15012 வரையிலும் ஏலம் போனது. இதேபோல் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 200 முட்டை பருத்தி ₹6 லட்சத்திற்கு ஏலம் போனது. ஆர்சிஹெச் ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ₹3699 முதல் ₹6189 வரையிலும், டிசிஎச் ரகம் ₹4099 முதல் ₹6289 வரை விற்பனையானது.

Tags : Athur ,
× RELATED டாஸ்மாக்கில் தகராறு: அதிமுக நிர்வாகி கைது