×

சிவகாசி சிவன் கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா தொடக்கம்

சிவகாசி, ஜூன் 4: சிவகாசி சிவன் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 11ம் தேதி நடக்கிறது. சிவகாசியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கோயில் பட்டர் சுப்பிரமணியம் கொடி மரத்தில் கொடியேற்றினார். சிறப்பு அலங்காரத்தில் விஸ்வநாதசுவாமி, விசாலாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.



முன்னதாக கொடி மரத்திற்கு பாலாஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தனம் அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரும் 9ம் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணமும், 11ம் தேதி திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Sivakasi Shiva Temple ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...