×

துர்நாற்றம் வீசும் நகராக மாறி வரும் ஏலக்காய் நகரம்

போடி, ஜூன் 4:போடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டிகளோடு வீடு, வீடாக சென்ற சேகரிக்கும் குப்பைகளை தனித்தனியே பிரித்து தனித்தனி தொட்டிகளில் நிரப்பி மொத்தம் சேர்ந்தவுடன் தெருக்களிலும் முக்கிய இடங்களில் வைத்திருக்கும் பெரிய குப்பை தொட்டிகளில் சேர்க்கின்றனர். பின்னர் நகராட்சி லாரிகள் மூலம் அந்த பெரிய குப்பைகளை எடுத்து போடி சிரக்காடு பகுதி நகராட்சி குப்பை கிடங்களில் சேர்க்கின்றனர். தற்போது கடந்த பல வாரங்களாக சுகாதார பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் ஒவ்வொரு வார்டுகளிலும் முக்கிய தெருக்களிலும் குப்பைகள் அதிகம் சேர்ந்து வருகிறது.

குறிப்பாக டி.வி.கே.கே நகர் 100 அடி சாலை, பெரியாண்டவர் ஹைரோடு, வாரச்சந்தை 100 அடி சாலை, பழைய பஸ்நிலையம், தேனி சர்ச் சாலை, திருமலாபுரம், பாரதிநகர், கருப்பசாமி கோயில் தெரு, தினசரி மார்க்கெட் என பல பகுதிகளில் குப்பை மேடுகளாக மாறி வருவதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பலவிதமான தொற்று நோய்களும் பரவி வருகிறது. தற்போது ஏலக்காய் நகரத்தின் நறுமணம் மாறி துர்நாற்றம் வீசும் நகரமாக மாறி வருவதால் நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : cardamom city ,city ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...