×

பொதுமக்கள் கடும் அவதி ஆண்டிபட்டியில் செயல்படும் கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை

தேனி, ஜூன் 4: தேனி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி  அருகே அரண்மனைப்புதுார் முல்லைநகரை சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் நர்மதா  (18). ஆண்டிபட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு  படித்து வந்தார். இந்நிலையில் இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி  போலீசாருக்கு பெற்றோர் தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் கிடந்த கடிதத்தையும் போலீசார்  கைப்பற்றினர். அந்த கடிதத்தில், எனது இறப்பிற்கு காரணம் மாமா மகன் பைரவன்  என குறிப்பிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : college student ,suicide ,civilians ,Andipatti ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை