×

சாலை ஓரத்தில் உள்ள அபாயகரமான கிணற்றுக்கு தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

காளையார்கோவில், ஜூன் 4:  காளையார்கோவில் அருகே சாலையோரம் தடுப்புச்சுவர் இன்றி உள்ள கிணற்றால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குருந்தனி கிராமத்தில் இருந்து நற்புதம் கிராமத்திற்கு செல்வதற்கு முன்பு வளைவில் அபாயகரமான கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு தடுப்புச்சுவர் இல்லை. நற்புதம், சாணாவூரணி, அரசகுளம், அணியவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் இந்த சாலை வழியாகத்தான் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

எனவே வாகனங்கள் நிலை தடுமாறி கிணற்றுக்குள் பாயும் நிலை உள்ளது. கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘தற்போது இப்பகுதியில் சாலைப்பணி நடைபெற்று வருவதால் அதோடு சேர்த்து கிணற்றிற்கும் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். இது குறித்து பல முறை  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னால் பாதுகாப்பு தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்’’ என்றனர்.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...