மதுரை, ஜூன் 4: மதுரை மத்திய சிறையில் 1600க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்கு என டிஐஜி பழனி, கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறை அலுவலர்கள் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் அவசரகால முதலுதவி விழிப்புணர்வு மற்றும் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.