×

கதவை உடைத்து பணம் கொள்ளை:

திருநகர் நெல்லையப்பர் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (40) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டார்.  நேற்று முன் தினம் இரவு இவர் வீட்டின்  கதவை உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெளியூரில் இருந்து வந்த முத்துச்சாமி, வீட்டில் இருந்த பத்தாயிரம் பணத்தை  கொள்ளையர்கள் கொள்ளையடித்து  சென்றதாக திருநகர் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...