×

பண்ருட்டி பகுதியில் மீண்டும் குட்கா விற்பனை அமோகம்

பண்ருட்டி, ஜூன் 4: பண்ருட்டி நகரில் கடலூர் மெயின்ரோடு, கும்பகோணம், சென்னை சாலைகளில் 50க்கும் மேற்பட்ட பங்க் கடைகள் உள்ளன. 10க்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி நகரம் முழுவதும் குட்கா அதிகளவு விற்பனையானது. பெங்களூரில் இருந்து பண்ருட்டி வந்த தனியார் பேருந்தில் பல லட்சம் மதிப்பிலான 4 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர். இரண்டு முறை பேருந்தில் வந்த மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அதன் பின்னர் கண்டுகொள்ளவில்லை. தற்போது பண்ருட்டி ஜவஹர் தெருவில் ஒரு மொத்த வியாபாரி மீண்டும் குட்காவை சில்லரை வியாபாரிகளுக்கு லட்சக் கணக்கில் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று விடுமுறை முடிந்து பள்ளி திறந்த நிலையில் குட்கா விற்பனை துவங்கி உள்ளது. பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட குட்கா அதிகாலையிலேயே சில்லரை கடைகளில் விற்பனை முடிந்துவிடுகிறது. பண்ருட்டியில் முற்றிலும் குட்கா விற்பனை ஒழித்துவிட்டதாக கூறும் போலீசாருக்கு தற்போது பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. எனவே பண்ருட்டி முழுவதும் குட்கா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : area ,Panruti ,
× RELATED வாட்டி வதைக்கும்...