×

மணல் கடத்திய வாலிபர் கைது

திட்டக்குடி, ஜூன் 4: திட்டக்குடி அடுத்துள்ள கோழியூர் வெள்ளாற்று அருகே போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன்(32) என்பவர் தனது மாட்டு வண்டியில் அரசு அனுமதி
யின்றி மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்த போது அரசு அனுமதியின்றி கோழியூர் வெள்ளாற்றங்கரையில் இருந்து மணல் எடுத்து வருவது என தெரியவந்தது. இதுகுறித்து திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை