×

ஆத்தூர் சோமநாதர் கோயிலில் ஜூன் 6ல் பாலாலய வைபவம்

ஆறுமுகநேரி, ஜூன் 4: ஆத்தூர் சோமசுந்தரி சோமநாதர் கோயிலில் வரும் 6ம் தேதி பாலாலய வைபவம் நடக்கிறது. ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயில் திருமால் சயனத்திருக்கோலத்தில் சிவபெருமானை பூஜிக்கும் ஐந்து தலங்களில் ஐந்தாவது தலமாகும். இக்கோயில் கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பாலாலய வைபவம் வருகிற 6ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் நடைபெற உள்ளது. பாலாலய துவக்க விழா நேற்று அதிகாலை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.  தொடர்ந்து கோமாதா பூஜையும், நவக்கிரஹ ஹோமமும் நடைபெற்றது.  இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (பொ) கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோயில் பூஜா ஸ்தானீகர் ஹரிஹர சுப்ரமணிய பட்டர் செய்திருந்தனர்.

Tags : ceremony ,Atoor Somanathar ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா