×

கோவில்பட்டி பிளம்பர் கொலையில் மேலும் ஒருவர் கைது

கோவில்பட்டி, ஜூன் 4:   கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் ஜெகஜோதிநகரை சேர்ந்தவர் சாலமன் மகன் ஸ்டீபன்ராஜ் (28). பிளம்பர் தொழில் செய்து வந்த இவருக்கும் ஊத்துமலை அருகே உள்ள ருக்மணியாபுரத்தை சேர்ந்த இசக்கிதுரை மனைவி இந்திராணிக்கும் (22) திருமணமாகியது. கடந்த 29ம் தேதி காலையில் வீட்டை விட்டு வெளியில் சென்ற ஸ்டீபன்ராஜ் மறுநாள்  மந்தித்போப்பில் உள் மாந்தோப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி.முரளிராம்பா உத்தரவின்பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு, கிழக்கு இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், சுதேசன், நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

 இதையடுத்து தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியை சேர்ந்த முருகேசன் மகன் கஞ்சா வியாபாரியான மகேஷ்குமார் (28), நாலாட்டின்புதூரை சேர்ந்த பெரியசாமி மகன் மந்திரமூர்த்தி (48), நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பெருமாள்சாமி மகன் தாமரைகண்ணன் (20) உள்ளிட்ட 5பேர் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மகேஷ்குமார், மந்திரமூர்த்தி, தாமரைகண்ணன் ஆகிய 3பேர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகேஷ்குமார் கஞ்சா வியாபாரம் செய்து வருவது குறித்து போலீசிற்கு தகவல் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவ்வழக்கில் தேடப்பட்ட நாலாட்டின்புதூர் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த குணசேகரன் மகன் இசக்கிமுத்து (22) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மெட்டமலையை சேர்ந்த கல்யாணசுந்தரை (21) போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : plumber murder ,Kovilpatti ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா