×

தென்காசி, ஏர்வாடி, புளியங்குடியில் பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி, ஜூன் 4:  தென்காசியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ரமலான் பெருநாளை முன்னிட்டு பித்ரா அரிசி வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் மைதீன்பிச்சை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்  திவான்ஒலி துவக்கி வைத்தார். நகர தலைவர் பொன்னானிஇப்ராகிம், பொருளாளர்  முகம்மதுகோதரி, துணை செயலாளர் சாகுல்ஹமீது, துணை தலைவர் அரப்ஷா,  செய்யதுபஷீர் அலி, முகம்மது இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர  செயலாளர் முகம்மது உசேன் நன்றி கூறினார். ஏர்வாடி பேரூர் கிளை தமுமுக சார்பில் ரமலானை முன்னிட்டு ஏழை எளியோருக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது. ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, சேமியா, எண்ணெய், கோதுமை, அப்பளம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் அண்ணாவி அன்வர் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் பக்ருதீன் அலி, முபாரக் அலி, அப்துல் லத்தீப், தமுமுக இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்ட செயலாளர் சித்திக் அல்தாபி, தமுமுக 8வது வார்டு தலைவர் நைனாமுகமது, மமக செயலாளர் அப்துல்காதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புளியங்குடியில் அல்காஸிம் கல்வி மற்றும் தொண்டு நல அறக்கட்டளை சார்பில் ரமலானை முன்னிட்டு பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி. அறக்கட்டளை தலைவர் முகம்மதுபுகாரி தலைமை வகித்தார். வருசை மரைக்காயர், முகம்மதுஇப்ராகிம், முகைதீன்அப்துல்காதர் முன்னிலை வகித்தனர். ஹபீஸ் அப்துல்காதர் கிராஅத் ஓதினார். அறக்கட்டளை பொருளாளர் கலந்தர் மஸ்தான் ஆலீம் வரவேற்றார். அறக்கட்டளை செயலாளர் முகம்மதுஜிப்ரில் 200 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி மற்றும் வேட்டி, சேலை வழங்கினார். விழாவில் முகம்மதுகாசீம், அபுபக்கர்சித்திக், செய்யது சுலைமான், முகம்மதுஇஸ்மாயில், சாகுல்ஹமீது உட்பட பலர் கலந்து கொண்டனர். முகம்மது ஜிப்ரில் ராஜா நன்றி கூறினார்.

Tags : Bitra Rice ,Tenkasi ,Puliyankudi ,Airwadi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...