×

அனந்தன்குளத்தில் படகு சவாரி நடத்த வேண்டும்

நாகர்கோவில், ஜூன் 4: அனந்தனாறு-அனந்தன்குளம் மற்றும் நீர்வள ஆதார மேம்பாட்டு அமைப்பின் தலைவர் குமரேசன், பொதுச்செயலாளர் கனகராஜ், பொருளாளர் ஜாண் உபால்ட் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அதிகாரி, ஆர்டிஓ, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ஆகியோரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அனந்தன்குளம் தூர்வாரப்பட்டு, படகு போக்குவரத்து விடப்பட்டுள்ளது. ஆனால் அதனை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்த ஆக்ரமிப்புகளை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில் 3 மாத காலத்திற்குள் அனந்தன்குளத்தை சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை எடுக்க வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் இதுவரை அனந்தன்குளத்தை சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றவில்லை. அனந்தன்குளத்தை சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை எடுக்க வேண்டும். அதுபோல் அனந்தன்குளத்தில் படகு சவாரியை தொடர்ந்து இயக்க வேண்டும். அனந்தன்குளத்திற்கு சுற்றுலா பயணிகள் வரும் வகையில் பஸ்கள் இயக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : boat ride ,
× RELATED பூலாம்பட்டி காவிரியில் விசை படகில்...