×

காரைக்கால் நிரவியில் கோயில் உண்டியலை உடைக்க முயன்றவர் கைது


காரைக்கால், ஜூன் 4: காரைக்கால் நிரவியில் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி செய்த சீர்காழியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் நிரவி எஸ்.ஐ மோகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு நிரவி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிரவி பெரியாச்சி கோயில் உண்டியல் அருகே சந்தேகத்திற்கு இடமாக அமர்ந்திருந்த, நபரை, எஸ்.ஐ மோகன் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தபோது, உண்டியலை உடைக்க வந்ததை அவர் ஒப்புகொண்டார். தொடர் விசாரணையில், சீர்காழி கொள்ளிடத்தை சேர்ந்த கண்ணன் மகன் ஐயப்பன்(39) என்பதும், ஏற்கெனவே பல இடங்களில் இதுபோன்று சிறு கோயில் உண்டியல்களை உடைத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.


Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...