×

கஞ்சா கடத்தியவர் கைது

நாகை, ஜூன்4: நாகூரில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் மறைத்து வைத்திருந்த 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் பிரதாபராமபுரம் கோயில் தெருவை சேர்ந்த அந்தோணி(31) என்பது தெரியவந்தது. இதையடுத்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags : Cannabis kidnapper ,
× RELATED கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தியவர் கைது