×

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 18 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு


சென்னை, ஜூன் 4: மின்வாரிய துறையின் அறிக்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் காஞ்சிபுரம். செங்கல்பட்டு அமலாக்க அதிகாரிகள், சோமங்கலம், திருமுடிவாக்கம் ஆகிய  பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் 18  மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் ₹8,86,160 இழப்பீடு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மேல்நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து, அதற்குரிய சமரச கூடுதல் தொகை ₹84,000 செலுத்தியதால், அவர்கள் மீது போலீசில் புகார் பதிவு செய்யவில்லை. மேலும், மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை 94458 57591  என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.



Tags : Kanchipuram ,Chengalpattu ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...